சீனாவில் முஸ்லிம்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக விமர்சித்து டிக்டொக் செயலியில் வீடியோ வெளியிட்டிருந்த அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண்ணின் கணக்கு முடக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு சீன டிக்டொக் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளதுடன், அவரது கணக்கை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் பெரோசா அசிஸ் என்பவர் சமீபத்தில் 40 விநாடிகள் ஓடக் கூடிய டிக்டொக் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பெண்கள் மேக்அப் போடுவது குறித்த செய்முறை போன்று தொடங்கும் வீடியோவில் சீனாவில் முஸ்லிம்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக விமர்சனம் செய்துள்ளார். அந்த வீடியோவை சுமார் 1.4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
மேலும், 5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இந்நிலையில், ஃபெரோசா அசிஸின் டிக்டொக் கணக்கை அந்நிறுவனம் முடக்கியது.
இதுகுறித்து தெரிவித்துள்ள பெரோசா அசிஸ், ‘டிக்டொக் என்னுடைய பக்கத்தை ஒரு மாதத்துக்கு முடக்கியுள்ளது. இது ஒன்றும் என்னை அமைதிப்படுத்தாது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள டிடிக்டொக் நிறுவனம், அமெரிக்காவை சேர்ந்த 17 வயதான பெரோசா அசிஸ் மீது ஏற்கனவே மற்றொரு வீடியோ தொடர்பாக எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதற்கும் சீனாவின் அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், அவரது குறிப்பிட்ட காணொளி நீக்கப்பட்டதற்கு 'மனித தவறுகளே' காரணம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் தலைநகர் பீஜிங்கை சேர்ந்த பைட்டான்ஸ் எனும் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்டொக், தங்களது உள்நாட்டு (சீனா) உள்ளடக்க கட்டுப்பாட்டு விதிமுறைகள் சீனாவிற்கு வெளியே உள்ள இடங்களுக்கு பொருந்தாது என்று கூறுகிறது.
எனினும், டிக்டொக் நிறுவனத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அசிஸ் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அசிஸ் கூறினார் "நான் இதைப் பற்றி தொடர்ந்து பேசுவேன், அதைப் பற்றி டுவிட்டரில், இன்ஸ்டாகிராமில், என்னிடம் இருக்கும் எந்த தளத்திலும், டிக்டொக் செயலியிலும் கூட பேசுவேன்.
"இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னரும் நான் டிக்டொக்கைப் பற்றி பயப்படவில்லை. டிக்டொக்கைப் பற்றி நான் பயப்பட மாட்டேன்."
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM