எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத் தொகையினை அதிகரிப்பது தொடர்பான ஒரு முன்மொழிவினை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ளது.
அதன்படி ஒரு அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் 25 இலட்சம் ரூபாவையும், சுயாதீன குழுக்கள் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் 30 இலட்சம் ரூபாவினையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்
தற்போதைய தேர்தல்கள் சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 50 ஆயிரம் ரூபாவையும், ஒரு சுயாதீன வேட்பாளர் 75 ஆயிரம் ரூபாவையும் இதுவரை கட்டுப்பணமாக செலுத்தியிருந்த நிலையில் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி ஒரு அரசியல் கட்சியிலிருந்து மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 7,500 ரூபாவையும் ஒரு சுயாதீன வேட்பாளர் 5,000 ஆயிரம் ரூபாவையும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM