7000 பேர் நிய­மன இடை­நி­றுத்­தத்தை பரி­சீ­லனை செய்­யு­மாறு கோரிக்கை: துரை­ரெத்­தினம்

Published By: J.G.Stephan

28 Nov, 2019 | 11:08 AM
image

7000 பேருக்கு கடந்த ஆட்­சியில்  வழங்­கப்­பட்ட நிய­ம­னத்தை இடை நிறுத்­து­மாறு கோரி­யதை மீள் பரி­சீ­லனை செய்­யு­மாறு ஜனா­தி­பதியிடம் முன்னாள் கிழக்கு மாகா­ண­ சபை சிரேஷ்ட உறுப்­பி­னரும், ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் முக்­கி­யஸ்­த­ரு­மான இரா.துரை­ரெத்­தினம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களும், இளைஞர், யுவ­தி­களும் சிர­மப்­பட்டு, பொரு­ளா­தார கஷ்­ரத்­துக்கு மத்­தியில் பட்­டப்­ப­டிப்பை முடித்து, ஒரு­வேளை உண­விற்குக் கூட காத்­தி­ருந்து உண்ண வேண்­டிய நிலை­யிலும் தனது தனிப்­பட்ட பொரு­ளா­தாரத் தேவைகள், குடும்பச் சுமை, ஒரு­சி­லரின் குழந்­தை­களைப் பரா­ம­ரிக்க வேண்­டிய சுமைகள், இப்­படி பல சுமை­களைத் தாங்கி அர­சாங்­கத்தில் ஒரு பதவி கிடைக்­காதா என பல வருட கால­மாக அலைந்து திரிந்தனர்.

ஏதோ­வொரு வகையில் நிய­மனம் கிடைத்­த­வுடன் ஏக்கப் பெரு­மூச்­சுடன் அளவு கடந்த சந்­தோ­சத்தில் கட­மைக்குச் செல்­வ­தற்கு தயா­ராக இருந்த நிலை­யிலும், கட­மைக்குச் சென்ற நிலை­யிலும் திடீ­ரென 7ஆயிரம் பேரி­னதும் நிய­மனம் இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது மிகவும் வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும்.

நல்­ல­ க­ருத்­துக்­களை முன்­வைக்கும் ஜனா­தி­பதி 7ஆயிரம் பேரின் நிய­ம­னத்தில் உத்­த­ரவு பிறப்­பித்திருப்பதென்­பது மிக­வும் வேத­னை­யை உண்­டாக்­கி­யுள்­ளது. வழங்­கப்­பட்ட நிய­ம­னத்தை அர­சியல் கட்சி ரீதி­யாகப் பார்க்­காமல் உங்கள் அரசின் ஆளு­மை­யுடன் எது நடந்­தாலும் மன்­னித்து உங்­களால் எடுக்­கப்­பட்ட முடிவை மீள் பரி­சீ­லனை செய்து இவ் 7ஆயிரம் பேரி­னதும் வாழ்க்­கைக்கு கண்ணைத் திறக்க வழி­ச­மைக்க வேண்டும். இவர்­களின் நிய­மனம் நிறுத்­தப்­ப­டு­மானால் சிலர் விரக்­தியின் விளிம்பில் தள்ளப்படு­வார்கள். வழங்­கப்­பட்ட நிய­ம­னத்தை இரத்துச் செய்­யாமல் தொடர்ச்­சி­யாக இவர்கள் கட­மை­களைச் செய்­வ­தற்கு பெருந்­தன்­மை­யோடு வழி சமைக்­கு­மாறு கேட்டுக் கொள்­கின்றேன்.

இவர்­க­ளது நிய­ம­னத்தை வழங்­கு­மி­டத்து மிகவும் நன்­றி­யு­டை­ய­வர்­க­ளாக இருப்­பார்கள். இந்தச் செய்தி கேட்­ட­தி­லி­ருந்து அவர்கள் ஒவ்­வொ­ரு­வரும் அலைந்து திரி­வதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது.

ஆகவே நல்­லெண்ணம் கொண்ட நீங்கள் இந்த விட­யத்தில் தலை­யிட்டு நிதி அமைச்சுக்கு இந்நியமனத்தை வழங்குவதற்கு உத்தரவுகளை பிறப்பிப்பீர்கள் என்னும் நம்பிக்கையுடன் உங்கள் முன்னுதாரணத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51