வடமராட்சி எல்லாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் பொலிஸாரின் பாதுகாப்புக் கெடிபிடிகளுக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக தீபம் ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.
தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இன்று மாலை 6.05 மணிக்குக் கடைப்பிடிக்கப்பட்டது. மாவீரர் இருவரின் தந்தையான பொன்னுத்துரை சுப்பிரமணியம் சக்கர நாற்காலியில் வந்து பொதுச் சுடர் ஏற்றி வைத்தார்.
இந்த நிலையில் வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள இடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அங்கு ஒலிபெருக்கி இயக்குவதற்கும் கொடிகள் கட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் சிவில் உடையில் நின்ற புலனாய்வாளர்களால் ஒளிப்படம் எடுக்கப்பட்டனர். எனினும் பாதுகாப்புக் கெடிபிடிகளுக்கு மத்தியில் உறவுகள் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
வடமராட்சி எல்லங்குளம் துயிலும் இல்லம் இடித்தழிக்கப்பட்டு தற்போது அங்கு இராணுவ அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM