வடமராட்சியில் பொலிஸாரின் பாதுகாப்புக் கெடிபிடிகளுக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக அஞ்சலி

Published By: Digital Desk 4

27 Nov, 2019 | 10:09 PM
image

வடமராட்சி எல்லாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் பொலிஸாரின் பாதுகாப்புக் கெடிபிடிகளுக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக தீபம் ஏற்றி  மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இன்று மாலை 6.05 மணிக்குக் கடைப்பிடிக்கப்பட்டது. மாவீரர் இருவரின் தந்தையான பொன்னுத்துரை சுப்பிரமணியம் சக்கர நாற்காலியில் வந்து பொதுச் சுடர் ஏற்றி வைத்தார்.

இந்த நிலையில் வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள இடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அங்கு ஒலிபெருக்கி இயக்குவதற்கும் கொடிகள் கட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் சிவில் உடையில் நின்ற புலனாய்வாளர்களால் ஒளிப்படம் எடுக்கப்பட்டனர். எனினும் பாதுகாப்புக் கெடிபிடிகளுக்கு மத்தியில் உறவுகள் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

வடமராட்சி எல்லங்குளம் துயிலும் இல்லம் இடித்தழிக்கப்பட்டு தற்போது அங்கு இராணுவ அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59