சிறுபான்மையினத்தவர்கள் முன்னால் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார தேரர்

Published By: Rajeeban

27 Nov, 2019 | 09:35 PM
image

ஏபி

தமிழில் ரஜீபன்

பல வருடங்களாக இலங்கை மன்னர்களின் முக்கிய பகுதியாக  விளங்கிய -சமீபத்தில் மதவன்முறைகளால் பாதிக்கப்பட்ட மலைகளின் நகரத்தில் , இலங்கை புதிய தலைவரை தெரிவு செய்திருப்பது குறித்து பௌத்த தலைவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

இலங்கையின் பெரும்பான்மை இனத்திற்கு இன்னொரு பொற்காலத்தை ஏற்படுத்துவார் அவர் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத ஒரு சிங்கள தலைவர் நாட்டிற்கு அவசியம் என்ற கொள்கையை நாங்கள் உருவாக்கினோம் என்கின்றார்,பௌத்தமதகுருவான ஞானசார தேரர்.

அந்த  கொள்கை வெற்றிபெற்றுள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.

ஞானசார தேரரும் அவரது பொதுபலசேனாவின் ஏனைய உறுப்பினர்களும்,இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தபாய ராஜபக்ச தமிழ் இன கிளர்ச்சிக்காரர்களுடனான போரை முடிவிற்கு கொண்டுவந்தமைக்காக சிங்கள பௌத்தர்களால் பெரும்வீரராக கருதப்படுகின்றார்.

எனினும் அவர் யுத்த அநீதிகளில் ஈடுபட்டார்,அரசாங்கத்தின் அனுசரனையுடன் இடம்பெற்ற காணாமல்போகச்செய்யப்படுதலிற்கு உத்தரவிட்டார் என்ற குற்றச்சாட்டுகள் காரணமாக சிறுபான்மை இனத்தவர்கள் அவர் குறித்து அச்சம்கொண்டுள்ளனர்.

அரசாங்கம் சிறுபான்மையினத்தவர்களின் கோரிக்கைகளிற்கு அதிகளவு செவிமடுக்கின்றது என சிங்கள தேசியவாதிகள் கடந்த சில வருடங்களாக குற்றம்சாட்டி வந்துள்ளனர்.முன்னைய அரசாங்கத்தின் மீதே அவர்கள் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.அந்த அரசாங்கத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் அமைச்சர்களாக பதவி வகித்தனர்.

இந்தியாவின் தென்பகுதி கரையில் உள்ள 22 மில்லியன் சனத்தொகையை கொண்ட இலங்கையின் 70 வீதமானவர்கள்- பௌத்தர்கள்- சிங்களவர்கள்.

சிங்களமன்னர்களினதும் அவர்களின் ஆலோசகர்களினதும் காலம் 1800 இன் ஆரம்பத்தில் முடிவிற்கு வந்தது. அவர்களை தோற்கடித்த பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் 1948 வரை இலங்கையை ஆண்டனர்.சுதந்திர இலங்கையில் பௌத்தத்திற்கு முதன்மை வழங்கப்பட்டபோதிலும் ஏனைய மதங்களிற்கான சுதந்திரம் உறுதி செய்யப்பட்டிருந்தது.

ஆனால் பௌத்த தேசியவாதம் தொடர்ச்சி வளர்ச்சியடைந்து வந்துள்ளது,இஸ்லாமிய தீவிரவாதத்தினால் உந்தப்பட்டவர்களினால் மேற்கொள்ள்பபட்ட உயிர்த்தஞாயிறு தாக்குதலி;ல் 269 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து பௌத்த தேசியவாதம் இலங்கை அரசியலில் முன்னிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களின் போது பௌத்தமதகுருமாருடன் அடிக்கடி தோன்றிய ராஜபக்ச அந்த தாக்குதல் குறித்து சுட்டிக்காட்டுவார்,மீண்டும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடியவர் தானே என தன்னை  முன்னிலைப்படுத்துவார்.

தற்போது இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச வெற்றிபெற்றுள்ள நிலையில்  இஸ்லாமியர்களை புறக்கணித்துவிட்டு  சிங்கள கலாச்சாரத்தை புதிய ஜனாதிபதி ஊக்குவிக்கவேண்டும் என ஞானசார தேரர் போன்றவர்கள் விரும்புகின்றனர்.

இஸ்லாமிய மத பாடநூல்களை இல்லாமல் செய்யவேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹலால், புர்கா,இஸ்லாமிய வங்கி, காதீ நீதிமன்றம்,சரியா பல்கலைகழகங்கள் அனைத்தும் சமூக ஒருமைப்பாட்மை அழித்து விட்டன என பேட்டியொன்றில் ஞானசார தேரர் தெரிவித்தார்.

கோத்தபாய ராஜபக்சவினால் ஒரு சட்டம், ஒரு தேசம் ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்றார் அவர்.

ஜனாதிபதி ராஜபக்சவிற்கும் அவரது சகோதரர் பிரதமர் ராஜபக்சவிற்கும் தானே ஆலோசகர் என தெரிவித்தார் ஞானசார தேரர்.

கோத்தபாய ராஜபக்ச கடந்தகாலங்களில் ஞானசார தேரரை பாராட்டியுள்ளார்.

ஆனால் அவரது பேச்சாளர் மொகான் சமரநாயக்க இதனை நிராகரித்தார்.

உத்தியோகபூர்வமான ஆலோசகர்களும் உத்தியோகப்பற்றற்ற ஆலோசகர்களும் இதுவரை நியமிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்றவேளை கோத்தபாய ராஜபக்ச நான் அனைத்து இலங்கையர்களினதும் ஜனாதிபதி என தெரிவித்திருந்தார்.

இன மத மொழி வேறுபாடுகளிற்கு அப்பால் நான் அனைத்து இலங்கையர்களிற்கும் சேவையாற்றவேண்டும் என்பதை நான் அறிந்திருக்கின்றேன் என அவர் குறிப்பிட்டார்.

எனினும் கண்டியில் உள்ள முஸ்லீம்கள் மத்தியில் இது குறித்து சந்தேகம் காணப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னதாகவே வன்முறையை சந்தித்த அந்த பகுதியிக்கு ராஜபக்ச ஆட்சிக்கு வந்துள்ளதால் என்ன நடக்கலாம் என்பது குறித்து முஸ்லீம்கள் மெல்லிய குரலில் பேசிக்கொள்கின்றனர்.

முஸ்லீம்கள் மீண்டும் தாக்கப்படலாம் என அச்சத்துடன் இருக்கின்றோம் என்கின்றார் இஸ்லாமிய போதகரான பசால் சம்சுடீன்.

இவரது சகோதரரான 23 வயது அப்துல் பாஜித் கண்டியில் இடம்பெற்ற கலவரத்தில் கொல்லப்பட்டார்.

பௌத்த மதகுருமார் அடங்கிய கும்பலொன்று பெட்ரோல் குண்டினை வீட்டிற்குள் எரிந்தவேளை அவர் மூச்சுத்திணறி பலியானார்.

சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் எங்களை பிழையாக புரிந்துகொண்டுள்ளனர், நாங்கள் ஈவிரக்கமற்றவர்கள்,அழிக்கப்படவேண்டியவர்கள் என கருதுகின்றார் பசால் சம்சுடீன்.

பௌத்தர்கள் பெரும்பான்யைமாக உள்ள நாடுகளில்  மத தேசியவாதமும் முஸ்லீம்களுடனான மோதலும்அதிகரித்து வருகின்றது.

மியன்மாரில் இலங்கையை போன்று முஸ்லீம்கள் தங்கள் மதநம்பிக்கைக்கும் வாழ்க்கை முறைக்கும் ஆபத்தானவர்கள் என்ற  கருத்து தேசியவாதிகள் மத்தியில் காணப்படுகின்றது.பௌத்தர்கள் பெரும்பான்மையினத்தவர்களாக காணப்படுகின்ற போதிலும் இந்த உணர்வு காணப்படுகின்றது.

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாத சக்திகளின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் பௌத்த தேசியவாதிகள் பின்னர் இதனை சமூக ஊடகங்களில் பரப்புகின்றனர்.

இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்றும் நோக்கம் அவர்களிற்கு உள்ளது,அவர்கள் அந்த நோக்கத்துடன் செயற்படுகின்றனர் ஆனால் நாங்கள் அதனை அனுமதிக்கமாட்டோம் என்கின்றார் பொதுபல சேனாவின் யட்டேவட்ட தர்மானந்த.

சிங்கள பௌத்தர்கள் மிகவேகமாக காணாமல்போகும் இனம் என்கின்றார் அவர் ,அதனை பாதுகாப்பது எங்களின் கடமை என அவர் குறிப்பிடுகின்றார்.

தங்களிற்குள்காணப்படும் தீவிரவாத போக்குகள் குறித்து பல பௌத்த மதகுருமார்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஞானசார தேரரும்ஏனைய தேசியவாதிகளும் வன்முறைகளில் இருந்துதங்களை தனிமைப்படுத்தி காண்பிக்க முயன்றுள்ளனர்.

ஆனால் அவர்களின் செல்வாக்கு உள்ளமை தெளிவான விடயம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அப்போதைய ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையிலிருந்த முஸ்லீம் அமைச்சரும் ,இரு முஸ்லீம் ஆளுநர்களும் பதவி விலகவேண்டும் என கோரி பௌத்த மதகுருவும் நாடாளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்னதேரர் கண்டியில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் எழுச்சிபெற்ற தேசியவாதத்தினால் பயனடைந்தவர் ஞானசார தேரர்.

நீதிமன்ற  அவமதிப்பிற்காக ஆறு வருட சிறைத்தண்டனை பெற்ற பின்னர் ஜனாதிபதியினால் அவரிற்கு பொதுமன்னிப்பு வழங்கினார்.அவர் கண்டிக்கு சென்று அத்துரலிய ரத்ன தேரருடன் உண்ணாவிரதப்போராட்டத்தில் இணைந்தார்.

பாதுகாப்பற்றவர்களாக உணரும் முஸ்லீம்கள்

முஸ்லீம்கள் பாதுகாப்பற்றவர்களா உணருகின்றனர்,அவர்கள் தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளதாக கருதுகின்றனர்,தங்களை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் திறன் மீது நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர் என்கின்றார் விரிவுரையாளரும் இலங்கை முஸ்லீமுமான பரா மில்லர்.

முஸ்லீம் இளைஞர்கள் புதிய குழப்பத்தில் உள்ளனர் என்கின்றார் அவர்.

அவர்கள் சீற்றத்தில் உள்ளனர்,அவர்கள் மத்தியில் ஆத்திரம் அதிகரித்துவருகின்றது அவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாதத்தை உறுதியாக நிராகரித்துள்ளனர் ஆனால் தங்களை பாதுகாக்க ஏதாவது செய்யவேண்டும் என கருதுகின்றனர் என்கின்றார் அவர்.

கொழும்பின் பெரிய பள்ளிவாசலில் சமீபத்தில் இடம்பெற்ற வெள்ளிக்கிழமை போது வர்த்தகரான எம்எஸ்எம் ஜனீர் முஸ்லீம்களிற்கு எதிரான  முரண்பாடு புதிய விடயமல்ல ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு பின்னர் அது உக்கிரமானதாக மாறியுள்ளது என குறிப்பிடுகின்றார்.

மீண்டும் வன்முறைகள் நிகழக்கூடும் என்ற அச்சத்தில் தாங்கள் வாழ்வதாக அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54