மலையகத்துக்கென தனியான பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அண்மைக்காலமாக வலுப்பெற்று வந்துள்ளது. அதனைச் செயற்படுத்துவதற்கு இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் முனைப்போடு இருக்கின்றார். இது தொடர்பாக என்னுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். எனவே கல்வியியலாளர்கள் கொண்ட குழுவை அமைத்து செயற்படுத்தும் பணிகளை ஆரம்பிக்கத் தயாராக இருக்கின்றேன் என 'கோப்பியோ' தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி.பி. தேவராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மலையக மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்கு தனியான பல்கலைக் கழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக பேசப்பட்டு வந்துள்ளது. அந்த ஆதங்கத்தைப் புரிந்து கொண்ட இ.தொ.கா. தலைவர் மற்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், தாம் அமைச்சுப் பொறுப்பை ஏற்றவுடன் முதல் கடமையாக மலையக பல்கலைக்கழகத்திற்கு செயல் வடிவம் கொடுக்க முன்வந்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது இ.தொ.கா. அதன் 32 அம்சக் கோரிக்கையிலும் இதனைக் குறிப்பட்டிருந்தது. பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இக்கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் என்னுடன் இது தொடர்பில் கலந்துரையாடலை நடத்தியிருந்தார். எந்த விதமான கட்சி பேதங்களும், அரசியல் பேதங்களும் இல்லாமல் எனது தலைமையில் அனைவரையும் உள்வாங்கி அதற்கான ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்களை மேற்கொள்ளவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இது மலையக சமூகத்துக்குத் தேவையான முக்கியமான பணி என்பதால் முழு மனதோடு தகுந்த ஒத்துழைப்பை வழங்கத் தீர்மானித்துள்ளேன். இதற்காக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஓய்வு நிலைப் பேராசிரியர்கள் உட்பட கல்வித்துறை சார்ந் தவர்களின் அபிப்பிராயங்கள், ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன. கல்விப் பணிக்காக சமூகத்திலுள்ள அனைவரையும் இணைத்துக் கொண்டு செயற்பட முன்வந்துள்ளமை ஆரோக்கியமான விடயம் ஆகும். இதை நான் மனதார வரவேற்கின் றேன்.
விரைவில் சம்பந்தப்பட்டவர்களுடன் சந்திப்பை ஏற்படுத்தி கலந்துரையாடல்களை நடத்தி ஆய்வுகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளேன். பல வருடங்களாக பேசப்பட்டு வந்த ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்குக் கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பத்தை நாம் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையான ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் தயங்காமல் முன்வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். இந்த ஆக்கபூர்வமான முயற்சி அரசியல் ரீதியில் வெற்றி பெற பலரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM