நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT) மற்றும் உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE) வரிகளை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (27) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அமைவாக தற்பொழுது 15 சதவீதமான வற் வரி மற்றும் 2 சதவீதமான தேசத்தை கட்டியெழுப்பும் வரி அடங்கலாக 17 சதவீத மொத்த வரியை 8 சதவீதமாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த மாதம் டிசம்பர் 1 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சரவை ஊடக பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM