(எம்.எப்.எம்.பஸீர்)
விசாரணைகளை முன்னெடுக்கும் எப்.சி.ஐ.டி. எனப்படும் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய இரு வேறு குற்ற விசாரணைகள் தொடர்பில் சந்தேக நபர்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடைகள் அதே விசாரணை அதிகாரிகளின் ஆதரவுடன் நேற்று தளர்த்தப்பட்டன.
கோட்டை நீதிவான் நீதிமன்றில் குறித்த விவகாரங்கள் விசாரணைக்கு வந்தபோது அந்த பயணத்தடைகளை நீக்குவதற்கு தாம் எதிர்ப்பில்லை என எப்.சி.ஐ.டி. அதிகாரிகள் மன்றில் தெரிவித்ததை அடுத்து நீதிவான் ரங்க திஸாநாயக்க விடுக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடைகளை தளர்த்தினார்.
அதன்படி தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர ஆகியோரின் வெளிநாட்டுப் பயணத்தடை முழுமையாகவும் மற்றும் பிறிதொரு விவகாரத்தில் வெளிநாட்டுப் பயணத்தடை வழங்கப்பட்ட முன்னாள் சுங்க பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ. விஜேவீர, சுங்க பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோரின் வெளிநாட்டு பயணத் தடைகள் என்பன தற்காலிகமாக தளர்த்தப்பட்டன.
ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை, நம்பிக்கை துரோகம் செய்தமை, மோசடி செய்தமை மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டம் மற்றும் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்த வழக்கு நேற்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
இதன்போது இந்த விவகாரத்தில் கைதாகி பிணையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில், பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, சரத் வீரவங்ச, ஹேமந்த பெரேரா சேனாரத்ன டி சில்வா ஆகிய சந்தேக நபர்கள் மன்றில் ஆஜராகினர்.
இது குறித்த விசாரணை அறிக்கை C5/15/2017 எனும் இலக்கத்தின் கீழ் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகளான
எப்.சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்.
இதன்போது மொஹமட் முஸம்மில் மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், அவர்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரினர்.
இது தொடர்பில் நீதிவான் எப்.சி.ஐ.டி.யின் நிலைப்பாட்டை கோரிய போது, வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கப்படுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனக் கூறினர். அதனையடுத்து நீதிவான் அவர்கள் குறித்த வெளிநாட்டுப் பயணத் தடைகளை நீக்கினார். இது குறித்த மேலதிக வழக்கு விசாரணை எதிர்வரும் 2020 மார்ச் 31ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர், தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவின் ஆலோசனை மற்றும் கோரிக்கைக்கு அமைய, அனுராதபுரம் 'சந்த ஹிரு சேய' நினைவுத் தூபியில் வைப்பதற்காக தங்கத்தினாலான சமாதி நிலை புத்தர் சிலையை அமைக்க யாழ். மாதகல் கடலில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கத்தில் 8 கிலோவை கடற்படைக்கு வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர மற்றும் முன்னாள் சுங்க மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோர் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை எதிர்வரும் 2020 மார்ச் 31 வரை தளர்த்த நீதிமன்றம் அனுமதியளித்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் மன்றுக்கு வந்த போது, சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் வெளிநாட்டு பயணத் தடையை தளர்த்த கோரிய நிலையில் விசாரணை அதிகாரிகளான எப்.சி.ஐ.டி.யினர் அதற்கு எதிர்ப்பில்லை என்று தெரிவித்தனர். இதனையடுத்தே நீதிவான் ரங்க திஸா நாயக்க வெளிநாட்டு பயணத் தடையை தளர்த்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM