கிளிநொச்சியில் நாய் இறைச்சி புழக்கத்தில் உள்ளதா என்கின்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இன்று 26-11-2019 கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக உள்ள வியாபார நிலையம் ஒன்றின் முன்பாக நாய் ஒன்றின் தோல் காணப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக விலங்குள் வெட்டப்பட்டு இறைச்சி பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் அதன் தோல் எவ்வாறு காணப்படுமோ அவ்வாறே நாயின் தோலும் காணப்பட்டுள்ளது. இந்த நாயின் தோல் பிரிதொரு நாய் அல்லது காகத்தினால் தங்களது கடைக்கு முன்பாக காவிவந்திருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்
நாயின் கால் ஒன்றின் அரைவாசி பகுதியுடன் இறைச்சி எடுக்கப்பட்ட தோல் காணப்பட்ட நிலையில் குறித்த விடயம் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டது.
அவர்களும் சம்பவ இடத்திற்கு வருகைதந்து அவற்றை பார்வையிட்டுள்ளனர். குறித்த தோலுக்குரிய நாய் வெட்டப்பட்டு இறைச்சி அகற்றப்பட்ட நிலையில் தோல் காணப்படுகிறது என்பதனை உறுதிசெய்துள்ளனர்.
மூன்று மாதங்களான நாய்க்குட்டி ஒன்றே இவ்வாறு இறைச்சிக்காக வெட்டப்பட்டிருக்கலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
விபத்தினால் இறந்த நாய்க்குட்டியாக இருக்க வாய்ப்பில்லை என்றும் இது சீராக வெட்டப்பட்டு இறைச்சி அகற்றப்பட்ட நாயின் தோலாக காணப்படுகிறது. எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் குறித்த விடயம் தொடர்பில் தாம் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM