இந்தியாவில் சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் மீது கொச்சியில் மிளகாய்த்தூளை மர்ம நபர்கள் வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் கொண்ட குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படவில்லை.
இருப்பினும் இந்த ஆண்டு சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது இல்லை என்பதில் கேரள அரசு உறுதியாக இருந்து வருகிறது. சபரிமலைக்கு செல்லும் பெண்களை கேரள அரசு திருப்பி அனுப்பிவருகிறது.
இதனிடையே கொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகே திருப்தி தேசாயுடன் வந்த பிந்து அம்மணி என்பவர் மீது சிலர் மிளகாய்த்தூளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு திருப்தி தேசாய் உள்ளிட்டோர் சபரிமலை செல்ல முயன்றபோது போராட்டம் நடத்தப்பட்டது. அதனால் அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM