மலையக மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் மோசமான வகையில் நடந்து கொண்ட முன்னாள் அமைச்சர் அதா வுல்லாவின் செயற்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்றாகும். அதேவேளை அந்த சந்தரப்பத்தில் மலையக மக்களுக்காக குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் மனோகணேசன் நடந்துக் கொண்ட விதம் வரவேற்க தக்கது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
ஒரு சமூகத்தின் உணர்வையும் அவர்களது கௌரவத்தையும் கொச்சைப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளையோ கருத்துகளையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
நேற்று கொழும்பு கொள்ளுபிட்டியில் அமைச்துள்ள சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்துவதை எம்மால் அனுமதிக்க முடியாது. நாட்டை வளப்படுத்த அயராது பாடுபடும்தோட்ட துறையைச் சார்ந்தவர்களை தோட்டக்காட்டான் என்று அழைப்பதை எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . இந்த வார்த்தை பிரயோகமானது மலையக மக்களின் மனதை பெரிதும் புண்படுத்தியுள்ளது.
இதனை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் எதிர்காலத்தில் நாவை அடக்கி பேசவேண்டுமென அதாவுல்லாவுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த நேர்காணலின் போது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் செயற்பட்ட விதத்தையும் பாராட்டி வரவேற்கிறேன் .
மலையகத்துக்கு பல்கலைக்கழகம்
மலையகத்துக்கென தனியான பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பது மலையக மக்களின் நீண்டகால கணவாகும்.இதனை நனவாக்கும் செயற்பட்டில் நாம் ஈடு பட்டுள்ளோம்.
மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து செயலறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி. தேவராஜ் தலைமையில் குழுவொன்றை நேற்று திங்கட்கிழமை அமைத்துள்ளேன். இக்குழுவில் மலையகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளேன்.இக்குழுவினர் பல்கலைக்கழகம் அமைய வேண்டிய இடம் தேவையான வளங்கள் மற்றும் ஏளைய தேவைகள் குறித்து செயற்திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பார்கள்.
குறித்த அறிக்கை கிடைத்த பின்னர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , உணர்கல்வி அமைச்சர் பந்துல்ல குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
(இரா.செல்வராஜா)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM