(தி.சோபிதன்)
மாவீரர் நினைவு வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் வடக்கில் உணர்வுபூர்வமாக அதனை அனுஷ்டிப்பதற்காக மாவீரர் துயி லும் இல்லங்கள் தயாராகியுள்ளன.
மாவீரர்களை நினைவு கூரும் வகை யில் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடக் கம் 27 ஆம் திகதி வரை மாவீரர் நிகழ்வு வாரம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப்போரில் விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கு மக்களினால் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் வடக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாளை 27 ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றி மாவீரர்களை நினைவுகூர மக்கள் தயாராகிவருகின்றனர்.
மாவீரர்நாள் நினைவேந்தல் குழுவினர், பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வடக்கிலுள்ள துயிலுமில்லங்களைப் பொறுப்பேற்று சிரமதானப்பணிகளை மேற் கொண்டு வருகின்றன.
குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ளமையினால் அதற்கு முன்பாகவுள்ள காணியை தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் பொறுப்பேற்று நினைவு தினத்திற்கான ஏற்பாடுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று பூநகரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் பொது மக்கள் பொறுப்பேற்று நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM