ஐரோப்பா கண்டத்தின் தென்கிழக்கேயுள்ள நாடான அல்பேனியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள்.
குறித்த நிலநடுக்கமானது, இன்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.54 மணிக்கு அல்பேனியாவின் வடமேற்கேயுள்ள ஷிஜாக் பகுதியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் 6.4 ரிச்டர் அளவுகோலில் ஏற்படுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் அல்பேனிய தலைநகர் டிரானாவில், மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
மாண்டினீக்ரோ, கொசோவோ, வடக்கு மசிடோனியா மற்றும் கிரீஸ் போன்ற தொலைவிலுள்ள நாடுகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், பல குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக உள்ளூர் செய்தி தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அல்பேனியாவைத் தாக்கிய 5.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் சேதமடைந்ததோடு, சுமார் 20 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ஏறக்குறைய 30 ஆண்டுகளின் பின்னர் அல்பேனியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் இதுவாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM