அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பறந்ததில் உயர் மின்னழுத்த கம்பிகளில் சிக்கிய சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தை சேர்ந்தவர் 65 வயதான தோமஸ் காஸ்கோவிச் பைபெர் கப் எனும் தனது சிறிய வகை விமானத்தை நேற்று செலுத்திய போது, உள்ளூர் நேரப்படி சுமார் 4 மணியளவில் ஸ்காட் கவுண்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து தாறுமாறாக அங்குமிங்குமாக பறந்த விமானம் அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பிகளில் சிக்கியது. இதையடுத்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
‘அவரச எண்ணான 911 க்கு அழைப்பு வந்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். மின்னழுத்த கம்பிகளில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக விமானி எவ்வித காயமுமின்றி மீட்கப்பட்டார்’ என பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM