AJ Pradhap
கண்டி, மெனிக்ஹின்ன பகுதியில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற வந்த 3 வயது குழந்தைக்கு “சேர்ச்சிகல் ஸ்பிரிட் ” என்ற மருந்துப்பொருளை வைத்தியர் வழங்கிய அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தனது குழந்தைக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக தாயார் அருகிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த வைத்தியர் ஒருவர் காயங்களை சுத்தப்படுத்தும் “சேர்ச்சிகல் ஸ்பிரிட் ” என்ற மருந்துபொருளை குழந்தைக்கு வழங்குமாறு கொடுத்துள்ளார்.
பின்னர் வீட்டுக்கு சென்று குறித்த மருந்து தொடர்பில் பரிசோதித்த தாயால், அது“சேர்ச்சிகல் ஸ்பிரிட் ” என தெரியவந்துள்ளது.
அதிர்ச்சிகுள்ளான தாய் உடனடியாக மெனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வைத்தியர் மெனிக்ஹின்ன மாவட்ட வைத்தியசாலையில் சேவைபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM