மர்மமான முறையில் உயிரிழந்த பிக்கு ஒருவரின் சடலமொன்றினை மடுல்சீமைப் பொலிசார் நேற்று இரவு மீட்டுள்ளனர்.
மடுல்சீமைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மெட்டிகாதன்னை என்ற இடத்திற்கு விரைந்த பொலிசார் பிரதான பாதைக்கருகேயுள்ள வடிகாணில் கிடந்த சடலத்தை மீட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் எக்கிரிய விகாரையின் தலைமைப் பிக்குவான பின்னவெல பஞ்சசார தேரர் என்ற 61 வயது நிரம்பியவருக்குரியதென பொலிசார் தெரிவித்தனர்.
லுணுகலை திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சடலத்தை மீட்ட மடுல்சீமைப் பொலிசார் சடலத்தைச் சட்ட வைத்திய பரிசோதனைக்கென இன்று பதுளை அரசினர் வைத்தியசாலை பிரேத அறைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இம்மரணத்தில் மர்மம் நிலவுவதாக பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM