இலங்கையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி செல்லப்பட்ட ரூபா 2 இலட்சம் மதிப்பிலான ஆமைக் குஞ்சுகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இலங்கையிலிருந்து நேற்று (24 ஆம் திகதி) காலை தமிழகத்தின் திருச்சிக்கு. சென்ற மலின்டோ ஏர்லைன்ஸ் விமானமத்தில் பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, 2 பயணிகள் தங்கள் உடைமைகளுக்குள் மறைத்து, நூற்றுக் கணக்கான அரியவகை ஆமைக்குஞ்சுகளை கடத்தி சென்றமை தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர்கள் இராமநாதபுரத்தைச் சேர்ந்த சுலைமான் (42), அப்துல் ரவூப் (36) என்பதும், மருத்துவ பயன்பாட்டிற்காக அவற்றை கடத்தி சென்றதாகவும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து ஆமைக் குஞ்சுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றின் மதிப்பு ரூபா 2 .இலட்சம் இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட ஆமைக் குஞ்சுகளின் வகை மற்றும் தன்மையை ஆய்வு செய்த பின்னர், அவைகளை வனத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அத்துடன், அவற்றை கடத்தி சென்ற 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM