தேர்தல் நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கும் வேட்பாளர்கள் செலவிடக்கூடிய அதிகபட்ச நிதியை வரையறை செய்வதற்கான சட்டமூலத்தை, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றிக்கொள்ளுமாறு, பெஃவ்ரல் அமைப்பு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சட்டமூலத்திற்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக, அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வது இலகுவாக அமையுமென அவ்வமைப்பினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மிக நீண்ட காலமாக நடத்தப்படாது இருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலையும் விரைவில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM