ஜப்பானில் அணுகுண்டு தாக்குதல் இடம்பெற்ற நகர்களுக்கு பாப்பரசர் முக்கியத்துவ விஜயம்

25 Nov, 2019 | 11:47 AM
image

ஜப்­பா­னுக்கு முக்­கி­யத்­துவம் மிக்க சுற்­றுப்­ப­ய­ணத்தை  மேற்­கொண்டுள்ள பாப்­ப­ரசர் பிரான்சிஸ் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை அணு குண்­டுத்­தாக்­கு­த­லுக்­குள்­ளான  நாக­சாகி மற்றும் ஹிரோ­ஷிமா பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள  போர் ஞாப­கார்த்த ஸ்தலங்­க­ளுக்கு விஜயம் செய்தார்.

இதன்­போது அவர் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்தப் பிராந்­தி­யத்தில் நடத்­தப்­பட்ட அணு குண்டுத் தாக்­கு­தலில் சிக்கி  உயிர் தப்பி தற்­போதும் வாழும் மக்­க­ளுடன் சந்­திப்பை மேற்­கொண்டார்.

அமெ­ரிக்­காவால் ஹிரோ­ஷிமா நகர்  மீது நடத்­தப்­பட்ட உலகின் முத­லா­வது அணு­குண்டுத் தாக்­கு­தலில் குறைந்­தது 140,000 பேரும்  அதற்கு 3 நாட்கள் கழித்து நாக­சாகி நகர் மீது நடத்­தப்­பட்ட இரண்­டா­வது அணு­குண்டுத் தாக்­கு­தலில் குறைந்­தது 74,000 பேரும் பலி­யா­கி­யி­ருந்­தனர்.

இந்­நி­லையில் நாக­சாகி நகரில் கூடி­யி­ருந்த பெருந்­தொ­கை­யான மக்கள் மத்­தியில் உரை­யாற்­றிய  பாப்­ப­ரசர், அணு ஆயுத உற்­பத்தி மற்றும் அதி­க­ரித்து வரும் ஆயுத விற்­பனை என்­ப­வற்­றுக்கு கடும் கண்­டனம் தெரி­வித்து அணு குண்டுத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு மலர்க்­கொத்தை வைத்து அஞ்­சலி செலுத்­தினார்.

அணு­குண்டுத் தாக்­கு­த­லை­ய­டுத்து கைக்­கு­ழந்­தை­யான  இறந்த சகோ­த­ரனின் உடலை தூக்கி வைத்­தி­ருக்கும் சிறுவன் ஒரு­வனை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டத்துக்கு அண்­மையில் நின்­ற­வாறு பாப்­ப­ரசர் தனது உரையை ஆற்­றினார்.

பரஸ்­பர அழிவு தொடர்­பான பயம் மற்றும் முழு­மை­யாக நிர்­மூ­ல­மாக்­கப்­படும் அச்­சு­றுத்தல் என்­பன சமா­தா­னத்­துக்கு  பொருத்­த­மற்­ற­வையாக உள்­ள­தாக குறிப்­பிட்ட அவர், அணு­ ஆ­யுத உற்­பத்­தியை தடுக்க வேண்­டிய அவ­சியம் குறித்து வலி­யு­றுத்­தினார்.

அவர் ஜப்­பா­னுக்­கான இந்த விஜ­யத்­தின்போது  நாக­சா­கி­யி­லுள்ள விளையாட்டு மைதா­ன­மொன்றில் இடம்­பெற்ற ஆரா­தனை நிகழ்வில் பங்­கேற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. இதன்­போது  மேற்­படி பிராந்­தி­யத்­தி­லுள்ள மக்­களின் ஆன்­மா­வுக்கு  அணு குண்டுத் தாக்­கு­தலால் ஏற்­பட்­டுள்ள காயம் குணப்­ப­டுத்­து­வ­தற்கு சிர­ம­மா­னது எனப் பாப்­ப­ரசர் கூறினார். இந்­நி­லையில் மூன்றாம் உலகப் போரொன்று ஏற்­படும் பட்சத்தில் அனைத்தும் சின்னாபின்னமாகிவிடும் என அவர் எச்சரித்தார்.

அத்துடன் ஜப்பானில் தமது மத நம் பிக்கைக்காக சித்திரவதைக்குள்ளாகி மரணத்தைத் தழுவிய சிறுபான்மை  கிறிஸ்தவர்களுக்கு பாப்பரசர் அஞ்சலி செலுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08