அழிக்கப்பட்ட தமிழ் பெயர்ப் பலகை ; பிரதமர் மஹிந்தவின் அதிரடி உத்தரவு

Published By: R. Kalaichelvan

24 Nov, 2019 | 07:16 PM
image

ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சில தமிழ் பெயர் பலகைகள் விசமிகளால் அழிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு அதனுடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் குறித்த தமிழ் பெயர்பலகைகளை சீர் செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சில தமிழ் பெயர் பலகைகள் அடையாளம் தெரியாத விசமிகளால் அழிக்கப்பட்டுள்ளது.

நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பிர­தான இரு வேட்பாளர்­களும் பெற்­றுக்­கொண்ட வாக்­கு­களை பிர­தே­ச­வா­ரி­யாக நோக்கும் போது சிறு­பான்­மை­யின தமிழ், முஸ்லிம் மக்­களில் பெரு­மள­வானோர் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரேம­தாச­விற்கே வாக்­க­ளித்­தி­ருந்­தனர். 

எனினும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­களின் பெரு­ம­ள­வான வாக்குகளைப் பெற்று ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­தாபய ராஜ­பக்ஷ தேர்­தலில் வெற்­றி­பெற்று, நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்றுக் கொண்டார்.

அத­னை­ய­டுத்து சில பிர­தே­சங்­க­ளிலும், குறிப்­பாக சமூ­க­வ­லைத்­த­ளங்­க­ளிலும் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களை அச்­சு­றுத்தும் வகை­யி­லான சம்பவங்­களும் பதி­வா­கி­யி­ருந்­தன. 

அவற்றின் தொடர்ச்­சி­யாக பிரதேசமொன்றில் பாணந்துரை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் தமிழ், சிங்­கள மற்றும் ஆங்­கிலப் பெயர்ப்­ப­ல­கை­களில் தமிழ் பெயர்ப்­ப­லகை மாத்­திரம் அகற்­றப்­பட்­டி­ருக்­கிறது.

இந் நிலையில் தமிழ் பெயர்ப்­ப­லகை அகற்­றப்­பட்­டி­ருக்கும் புகைப்­ப­டங்­களை தனது டுவிட்டர் பக்­கத்தில் மங்­கள சம­ர­வீர பதி­வேற்றம் செய்­தி­ருக்­கின்றார். 

அத்­தோடு, 'தேர்தல்  முடி­வ­டைந்து ஒரு­வாரம் கடந்­தி­ருக்கும் நிலையில் மீண்டும் பெரும்­பான்­மை ­வா­தத்தின் அழுக்­கான முகம் வெளிப்­பட ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. தமிழில் காணப்­பட்ட வீதி­களின் பெயர்கள் அகற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. 

ஜனா­தி­பதி அவர்­களே, இது­கு­றித்த உங்­க­ளு­டைய பிர­தி­ப­லிப்­பிற்­காக நாடு காத்­துக் ­கொண்­டி­ருக்­கி­றது என்றும் பதி­விட்டிருந்தார்.

இந்நிலையிலேயே பிரதமர்  மீண்டும் தமிழ் பெயர்பலகைகளை சீர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10