(ஆர்.யசி)
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களின் பிரதான இருவர் தவிர்ந்து ஏனைய 33 வேட்பாளர்களிடம் இருந்து 2.5 மில்லியன் ரூபாய்களை தேர்தல்கள் ஆணைக்குழு பறிமுதல் செய்துள்ளது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர் தலா 50 ஆயிரம் ரூபாயும், சுயேச்சை வேட்பாளர் தலா 75 ஆயிரம் ரூபாயும் கட்டுப்பணம் செலுத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டது.
அதேபோல் ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தலில் 12.5 வீத வாக்குகளுக்கு மேல் பெற்றால் கட்டுப்பணம் மீளவும் உரிய நபர்களுக்கு செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகிய இருவர் மட்டுமே 12.5 வீதத்தை தாண்டிய வாக்குகளை பெற்றுக்கொண்டனர்.
ஆகவே அவர்கள் இருவர் தவிர்ந்து ஏனைய 33 வேட்பாளர்களின் சார்பில் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் ரூபாயும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கே சொந்தமாகியுள்ளது.
இதில் பிரதான மூவர்களின் ஒருவராக கருதப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயகவும் 3.16 வீத வாக்குகளையே பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM