மண்சரிவு அபாயத்தை எதிர் நோக்கியுள்ள மஸ்கெலியா காட்மோர் கல்கந்தை தோட்ட மக்களுக்கு ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும் வீடுகள் அமைத்து கொடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த தோட்டத்தில் ஒரு உயர்ந்த மலை பகுதியின் கீழ் அமைக்கப்பட்ட இரண்டு தொடர் லயன் குடியிருப்பில் 47 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக குறிப்பாக குடியிருப்புக்கு மேலுள்ள மண் மேட்டில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு கற்பாறைகள் உருண்டு குடியிருப்புகளுக்கு சேதம் விளைவித்ததையடுத்து அந்த 47 குடும்பங்களை சேர்ந்த 204 பேர் காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
இதையடுத்து ஒரு மாத காலம் முடிந்து அந்த 47 குடும்பங்களும் மீண்டும் அப்பகுதிக்கே திருப்பி அனுப்பபட்டார்கள்.
இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இவர்களுக்கு மாற்றிடங்களில் வீடுகள் அமைத்து கொடுப்பதாக மலையக அரசியல் தலைமைகள் வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும் இன்று வரை கவனம் செலுத்தப்படவில்லை.
மழை காலங்களில் தாம் பெரும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும் எந்த நேரத்திலும் ஆபத்து நேரலாம் எனவும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சின் மூலமாக பல்வேறு இடங்களில் வீடமைப்பு திட்டங்கள் கடந்தகாலத்தில் நடைமுறைபடுத்தப்பட்டு வந்தாலும் இவ்வாறான பகுதிகளுக்கு தனி வீட்டு திட்டம் என்பது எட்டாகனியாகவே உள்ளது. எனவே புதிய அரசாங்கமாவது கவனம் செலுத்துமா என மக்கள் கேட்க்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM