(எம்.எப்.எம்.பஸீர், செ.தேன்மொழி)
சூழல் பாதுகாப்பு மற்றும் சூழல் அலங்காரத்தை மீண்டும் சீரான நிலைக்கு கொண்டு வரும் நோக்குடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு விஷேட ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அதன்படி பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரால் கமல் குணரத்னவின் மேற்பார்வையின் கீழ் சூழல் பாதுகாப்பு மற்றும் அலங்காரம் தொடர்பில் விஷேட செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில், அந்த சூழல் சார் விஷேட செயற்றிட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளும், நடவடிக்கைகளும் இன்று கொழும்பு நகரில் இடம்பெற்றது.
காலி முகத்திடல், புறக்கோட்டை பஸ் நிலையம் மற்றும் சுதந்திர சதுக்கம் பகுதிகளில் சூழல்சார் சிறப்பு நடவடிக்கைகளை பொலிஸார் இன்று ஆரம்பித்தனர்.
இந் நிலையில், நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் சிறப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் ஸ்தாபிக்கப்பட்டிருந்த சுற்றுச் சூழல் பாதுகாப்பு அறைகள் வினைத் திறனாக செயற்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.
அதன்படி சுற்றுச் சூழல் பாதுகபபு தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் கீழ், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரை மேர்பார்வை மற்றும் ஆலோசனை நடவடிக்கைகளுக்காக நியமிக்கவுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM