'இலங்கையை சுத்தமாக வைத்திருப்போம்' ஜனாதிபதியின் வழிகாட்டலில் பணிகள் ஆரம்பம்!

Published By: Vishnu

24 Nov, 2019 | 06:58 PM
image

(எம்.எப்.எம்.பஸீர், செ.தேன்மொழி)

சூழல் பாதுகாப்பு மற்றும் சூழல் அலங்காரத்தை மீண்டும் சீரான நிலைக்கு கொண்டு வரும் நோக்குடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு விஷேட ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 

அதன்படி  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரால் கமல் குணரத்னவின் மேற்பார்வையின் கீழ் சூழல் பாதுகாப்பு மற்றும் அலங்காரம் தொடர்பில் விஷேட செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இந் நிலையில், அந்த சூழல் சார் விஷேட செயற்றிட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளும், நடவடிக்கைகளும் இன்று கொழும்பு நகரில் இடம்பெற்றது. 

காலி முகத்திடல், புறக்கோட்டை பஸ் நிலையம் மற்றும் சுதந்திர சதுக்கம் பகுதிகளில் சூழல்சார் சிறப்பு நடவடிக்கைகளை பொலிஸார் இன்று ஆரம்பித்தனர்.

இந் நிலையில், நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் சிறப்பு  வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் ஸ்தாபிக்கப்பட்டிருந்த சுற்றுச் சூழல் பாதுகாப்பு அறைகள் வினைத் திறனாக செயற்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார். 

அதன்படி சுற்றுச் சூழல் பாதுகபபு தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் கீழ், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரை மேர்பார்வை மற்றும் ஆலோசனை நடவடிக்கைகளுக்காக நியமிக்கவுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59