போதைப் பொருட்களுடன்  பெண் உட்பட ஐவர் கைது

Published By: R. Kalaichelvan

24 Nov, 2019 | 03:56 PM
image

(செ.தேன்மொழி)

இரத்தினப்புரி - வேவல்வத்தை பகுதியில் 16.5 கிராம் போதைப் பொருட்களுடன் பெண்ணொருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேவல்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்துர பகுதியில் நேற்று மாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக வேவல்வத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதன்போது இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணொருவரும் ,களனி பகுதியைச் சேர்ந்த 30-35 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் , ஹசீஸ் போதைப்பொருள் மற்றும் கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வேவல்வத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமிந்தகுமாரவின் தலைமையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55