(செ.தேன்மொழி)
புளியங்குளம் - நயினைமடு பகுதியில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புளியன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நயினைமடு வனப்பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் பொலிஸாருக்கு இராணுவ புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
வவுனியா மற்றும் நெடுங்கேனி பகுதியைச் சேர்ந்த 28 - 56 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் ஒருவர் விடுதலை புலிகள் அமைப்பில் அங்கத்துவராக இருந்து தற்போது புனர்வாழ்வு பெற்று வந்துள்ளவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது இரு மோட்டார் சைக்கிள்களும் , அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்களும் மற்றும் பூஜைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவத்தின் போது ஒருவர் தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM