(ஆர்.விதுஷா)
மேல்மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 15 ஆயிரத்து 632 பேர் வரையில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் டெங்கு நோய்த்தாக்கம் மேலும் அதிகரித்து செல்வதனை தடுப்பதற்காக சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு பொதுமக்களிடம் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில்மாத்திரம் இவ்வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 934 பேரும் , கொழும்பின் ஏனைய பகுதிகளில் 12 ஆயிரத்து 698 பேரும் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் இம்மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 391 பேரும் , கொழும்பின் ஏனைய பகுதிகளில் 2ஆயிரத்து 23 பேரும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கடந்த மாதத்திலேயே அதிகளவிலானோர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்ததுடன், 11 ஆயிரத்து 213 பேரே இவ்வாறு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தனர். ஆயினும் இம்மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 10 ஆயிரத்து 273 பேர் வரையில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் இது வரையில் சுமார் 73 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன், கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் சுமார் 2 ஆயிரத்து 970 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், அம்மாதமே இது வரையான காலப்பகுதியில் குறைந்தளவிலாநோர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளான மாதமாக பதிவாகியுள்ளது.
மேலும்,கொழும்பு ,கம்பஹா,கண்டி ,களுத்துறை ஆகிய பகுதிகளிலேயே டெங்கு நோய்த்தாக்கம் இம்மாதத்தில் அதிகரித்த மட்டத்தில் காணப்படுகின்றது.
அந்த வகையில் முறையே , கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 414 பேரும் , கம்பஹா மாவட்டத்தில் ஆயிரத்து 17 பேரும் , கண்டி மாவட்டத்தில் ஆயிரத்து 468 பேரும் , களுத்தறை மாவட்டத்தில் மாத்திரம் 695 பேர் வரையிலும் இம்மாதத்தின் இது வரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த வருடத்தில் நவம்பர் மாதத்தில் 4 ஆயிரத்து 537பேர் வரையில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில் இவ்வருடத்தில் நவம்பவர் மாதத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது.
மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக டெங்கு நுளம்பு பரவும் வேகம் அதிகரித்து வருவதானால் நீர்தேங்கி நிக்கும் இடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி துப்புரவு சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்தியருப்பது பொதுமக்களின் பொறுப்பாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM