(நா.தனுஜா)
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் முகங்கொடுத்துள்ள வன்முறைகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ விற் கு கூறியிருப்பதாகவும் அத்தகைய வன்முறை சம்பவங்கள் தடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்திருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச மற்றும் நகரசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், சஜித் பிரேமதாசவிற்கு பெரும்பான்மையாக வாக்களித்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் சில பதிவாகியிருந்தன. அதேபோன்று அவர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வெறுப்புணர்வுப் பேச்சுக்கள் பரப்பப்படுவதையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள வன்முறைகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவுடன் கலந்துரையாடியிருப்பதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவரது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பதிவிட்டிருக்கிறார்.
அப்பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ள வன்முறைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன். அத்தகைய வன்முறைகள் தடுக்கப்படும் என்று அவர் என்னிடம் உறுதியளித்திருக்கின்றார். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதை தேர்தல் காலத்தில் மாத்திரமன்றி, அதன் பின்னரும் உறுதி செய்வது மிகவும் அவசியமானதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM