ரயில் கடவை ஊழியர்களுக்கு புதிய ஆட்சியிலாவது தீர்வுகள் கிடைக்க வேண்டுமென வடகிழக்கு ரயில் கடவை ஊழியர் ஒன்றியத்தின் தலைவர் ரொகான் ராஜ்குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
நாடு முழுவதும் 2064 ஊழியர்கள் ரயில் கடவை ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றனர். எமது பணிக்கான நிரந்தர நியமனம் கிடைக்காத நிலையில் வெறும் 250 ரூபா சம்பளத்தில் மிகவும் சிரமப்பட்டு எமது குடும்ப வாழ்க்கையைக் கடந்த 7 வருடங்களாக நகர்த்தி வருகிறோம். எமக்கான நிரந்தர நியமனம், மற்றும் சம்பள அதிகரிப்பு தொடர்பாகக் கடந்த அரசிற்குப் பலமுறை தெரிவித்தும் அது தீர்க்கப்படாமல் அடிமைகளைப் போலவே நாம் நடத்தப்பட்டோம்.
எமக்கான தொழில் பாதுகாப்பு இல்லாத நிலையில் நேற்று முன்தினம் கூட கட்டன் மல்லிகைப்பூ பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கடமையின் போது புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார். இது போல வருடாவருடம் விபத்துக்களும் உயிரிழப்புக்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. இதுவரை பல ஊழியர்கள் கடமையின் போது விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் புதிய ஜனாதிபதிக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். அவரது ஆட்சியில் நாடு சுபீட்சமடைந்து மக்களுக்கான விடுதலை கிடைத்து அடிமைப்படுத்தப்பட்டு, அரசியல் பழிவாங்கலிற்கு உட்படுத்தப்பட்டவர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும் என நம்புகிறோம்.
நாம் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை நேரடியாகச் சந்தித்து எமது பிரச்சினைகள் தொடர்பாகத் தெரிவித்திருந்தோம். அவர் எமது பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
எனவே தற்போது அவர் பிரதமராகப் பதவி ஏற்றுள்ள நிலையில் எமக்கு வாக்குறுதி அளித்தபடி எமக்கான தீர்வினை பெற்றுதர வேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பு என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM