முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை மேன்முறையீட்டு நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்கியுள்ளது.
லலித் வீரதுங்கவால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை ஒன்றை பரிசீலனை செய்த தீபாலி விஜேசுந்தர மற்றும் ருவன் பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லலித் வீரதுங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி காஞ்சன ரத்வத்தே, தனது கட்சிக்காரருக்கு ஜனாதிபதியுடன் இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ள அழைப்பு வந்துள்ளமையினால், குறித்த காலப்பகுதிக்காக தற்போது நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை நீக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
குறித்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் குழாம், லலித் வீரதுங்க மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரை தளர்த்துவதற்கு உத்தரவிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM