“என்னைப் பார்க்க வரும் பொதுமக்கள், பூங்கொத்துக்கு பதிலாக நல்ல புத்தகங்கள் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு, பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்தியாவின் கேரள மாநிலம் வட்டியூர்க்காவு தொகுதியைச் சேர்ந்தவர் வி.கே.பிரசாந்த். இவர், சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.இதையடுத்து அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த உள்ளூர் அரசுப் பள்ளி நிர்வாகிகள், “எங்கள் மாணவர்களுக்கு நூலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர் பிரசாந்த், கடந்த 14 ஆம் திகதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “என்னைப் பார்க்க வரும் பொதுமக்கள், பூங்கொத்துக்குக்கு பதிலாக நல்ல புத்தகங்களை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, அவரை சந்திக்கச் செல்லும் அனைவரும் புத்தகங்களை வழங்கத் தொடங்கினர். “இதன்மூலம் தற்போது, 3,500க்கும் அதிகமான புத்தகங்கள் வந்துள்ளன. விரைவில் அந்த புத்தகங்களை, அரசுப் பள்ளிகளுக்கு வழங்கவுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பிரசாந்தின் இந்த செயலுக்கு, பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM