(எம்.மனோசித்ரா)
இலங்கையின் புதிய பிரதமராக இன்று பதவியேற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு சர்வதேச தலைவர்கள் டுவிட்டர் வலைத்தளத்தினூடாக வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பதிவினூடாக தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் , ' இலங்கையுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் , இதனூடாக எதிர்காலத்தில் வலுவான பிணைப்பை கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாகவும் ' குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தனது வாழ்த்து செய்தியில், ' இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளமைக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன். தொடர்ந்தும் இலங்கை - நேபாளம் ஆகிய இரு நாடுகளின் உறவு வலுவடைவதோடு, தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளோம் ' என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்விரு தலைவர்களதும் வாழ்த்து செய்திக்கு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளதோடு, அவர்கள் கூறியுள்ளதைப் போன்று தாமும் இரு நாடுகளுடனும் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM