அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் க.பொ. சாதாரணதர பரீட்சைக்கு மேலதிகமாக ஒன்பது விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவற்றில் இரத்மலானை, தங்காலை, மாத்தறை, சிலாபம், கொழும்பு மெகசின் சிறைச்சாலை, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, வடரெக சனித்தா வித்தியாலயம், நேபாளம் காத்மண்டு நகரத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் அகிய இடங்களில் இந்த விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்நிலையில், நேபாளத்தில் நடைபெறும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் ஏழு இலங்கை விளையாட்டு வீரர்கள் நுபாளத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் பரீட்சைகளுக்கு தோற்றுவர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்முறை பரீட்சைக்கு 4 இலட்சத்து 33 ஆயிரத்து 50 பாடசாலை பரீட்சாத்திகள் தோற்றவுள்ளர். தனியார் பரிட்சாத்திகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 83 ஆயிரத்து 958 ஆகும். மொத்த பரீட்சாத்திகளின் எண்ணிக்கை 7 இலட்சத்து 17 ஆயிரத்து எட்டு ஆகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM