ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்துமாறு கோரியும், கிழக்கு ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிக்குமாறும் முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஷ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலங்களில் நாட்டில் தங்களால் இனங்காணப்பட்ட பல விடயங்களான சிறுபான்மையினரின் தேவைகள், வெளிநாட்டு கொள்கைகள், நிதிக் கொள்கைகளை அமுல்படுத்துதல், நாட்டின் பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு, இயற்கைச் சூழலைப் பாதுகாத்தல், பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பு, மூவினமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், தேசியகொள்கை வகுத்தல், கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, கல்முனைப் பிரதேசசெயலகம் தரம் உயர்த்துதல், மலையக மக்களின் 1000ரூபா சம்பள அதிகரிப்பு, கல்வி சீர்திருத்தம், விவசாய நீர்ப்பாசனக் கொள்கை, பல்கலைக்கழகம் தொடர்பான விடயங்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு இது போன்ற இன்னும் பல விடயங்களை அமுல்படுத்துவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியதோடு, தேர்தல் மேடைகளிலும், பிரசாரம் செய்தீர்கள்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல விடயங்களுக்கு மக்கள் முன் உத்தரவாதம் அளித்திருந்தீர்கள். அந்த வகையில் சில விடயங்கள் உள்ளடக்கப்படும். தற்சமயம் பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். சிங்கள மக்கள் அளித்த அதிகப்படியான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் முழு நாட்டினதும், முழு இனங்களினதும் ஜனாதிபதி நீங்கள்.அந்தவகையில் சிறப்பான வெற்றியை எட்டியுள்ளீர்கள். தமிழ்மக்களுக்கு செய்யும் சேவையூடாக அம்மக்களின் விரக்தியிலிருந்து போக்குவீர்கள் என்னும் நம்பிக்கை எமக்கு உண்டு.
எனவே தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன் வைக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்த வேண்டும். இம்மாவட்டமானது மூவின மக்களையும் உள்ளடக்கிய மாவட்டமாகும். இங்கு கடந்த காலத்தில் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் நிதி ஒதுக்கீட்டின் போது கட்சி சார்பாகவும், இனம் சார்பாகவும், தனிப்பட்ட ரீதியிலும், சமூகநலன் இல்லாமல் சில நிதி ஒதுக்கீடுகள் நடைபெற்றுள்ளன. இதன் தாக்கத்தை தமிழ் மக்கள் அனுபவித்தவர்கள் இங்கு சமூகநலனோடு மூன்று இனங்களும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு உங்களால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்திட்டங்கள் முன்னுதாரணமாக அமைய வேண்டும்.
கிழக்கு மாகாணம் என்பது தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற மாகாணமாகும். வடக்கிற்கு தமிழர் ஒருவர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதைப் போல் கிழக்கு மாகாணசபைக்கும் கட்சி நலன் பாராது, இனம்பாராது, மதம்பாராது ஊழல்மோசடியற்ற நல்லதொரு தமிழ் ஆளுநர் ஒருவரை நியமித்து தாங்கள் முன்னுதாரணமாக எல்லா இன மக்களுக்குமான ஜனாதிபதி என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். நல்ல செயற்திட்டங்கள் ஊடாக தமிழ் மக்களின் மனங்களை இனியாவது வெல்வதற்கு வழிசமைப்பீர்கள் என நம்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM