(ரொபட் அன்டனி)
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது தமிழ் மக்களின் வேதனை எங்களுக்கு புரிகின்றது. அந்த மக்களின் உடனடி தேவை என்ன என்பது குறித்து நாங்கள் நிச்சயம் ஆராய்ந்து பார்ப்போம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்பு வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியுள்ளார். இதுவொரு வரலாற்று ரீதியான வெற்றியாகும். ஐக்கிய தேசிய கட்சியை மக்கள் நிராகரித்துள்ளனர்.
ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் அதிகளவு எமது வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை. எனினும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வலியை நாங்கள் புரிந்துகொள்கின்றோம்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இழப்புக்களை சந்தித்தவர்கள். எனவே அவர்களுக்கு அந்த வலி இருக்கும். அதனால் தமிழ் மக்கள் தேர்தல்களில் தமது எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.
உதாரணமாக எனது மகன் ஒரு தரப்பினரால் தண்டிக்கப்பட்டால் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல் போகும். எனது மகன் தவறு செய்திருந்தாலும் கூட என்னால் அவர் தண்டிக்கப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாது. அந்த தரப்பினர் பின்னர் என்னிடம் ஆதரவு கேட்டு வந்தால் என்னால் நான் ஆதரவு வழங்க மாட்டேன். அதன்போது என்னுடைய உணர்வு புரிந்துகொள்ளப்படவேண்டியது அவசியமாகும்.
அந்தவகையிலேயே தமிழ் மக்களின் உணர்வை நாங்கள் புரிந்து கொள்கின்றோம். எனவே புதிய அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அவர்களின் தேவைகள் குறித்து ஆராயவேண்டியுள்ளது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்ததும் எமது அரசாங்கம் வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்திகளை செய்தது. எனினும் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இன்னும் குமுறலுடன் இருக்கின்றமையை புரிந்துகொள்கின்றோம். அதனால் எதிர்காலத்தில் அந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து விசேட அவதானம் செலுத்துவதுடன் அவற்றுக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் ஆராய்வோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM