கிழக்கு மாலியில் படையினருக்கும் தீவிரவாத குழுவினருக்குமிடையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற மோதலில் குறைந்தது 24 படையினரும் 17 தீவிரவாதிகளும் உயிரிழந்துள்ளதுடன் 29 க்கு மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர்.
வட–கிழக்கு நகரான தபாங்கோர்டடில் படையினரை இலக்குவைத்து தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியதையடுத்து மாலி மற்றும் நைகர் படையினர் கூட்டிணைந்து தீவிரவாதிகளின் தளங்கள் மீது பதில் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது நூற்றுக்கு மேற்பட்ட தீவிரவாத குழு உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாலி இராணுவத்தினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலின் போது 70 க்கு மேற்பட்ட வாகனங்களுக்கும் பெருந்தொகையான கட்டிடங்களுக் கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு வட மாலியை மத தீவிரவாதிகள் கைப்பற்றியதையடுத்து அந் தப் பிராந்தியத்தில் வன்முறைகள் இடம்பெறுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாலியின் முன்னாள் ஐரோப்பிய ஆட்சியாளரான பிரான்ஸ், பிராந்தியத்திலுள்ள தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM