ரி20உலக கிண்ணப்போட்டிகளின் பின்னரும் தான் தொடர்ந்து விளையாடக்கூடும் என லசித்மலிங்க தெரிவித்துள்ளார்.
ரி20 யில் பந்துவீச்சாளர் ஒருவர் நான்கு ஓவர்களை மாத்திரமே பந்து வீசவேண்டும்என சுட்டிக்காட்டியுள்ள மலிங்க எனது திறமைகளை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது என்னால் அந்த நான்கு ஓவர்களையும் வீச முடியும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் ரி 20 லீக் போட்டிகளில் நான் விளையாடியுள்ளதால் இரண்டு வருடங்களிற்கு மேல் என்னால் விளையாடமுடியும் எனவும் நான் கருதுகின்றேன் என லசித்மலிங்க தெரிவித்துள்ளார்.
மாற்றத்தின் தருவாயில் உள்ள இலங்கை அணியை புதியயுகத்தை நோக்கி தன்னால் வழிநடத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அணியில் திறமையானபந்துவீச்சாளர்கள் இல்லை அவர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுகின்றார்கள் இல்லை என குறிப்பிட்டுள்ள லசித்மலிங்க ஒரு வருடம் ஒன்றரை வருடத்திற்குள் அனைத்தையும் சரிசெய்ய முடியும் என கருதுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சி என்பதுமிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ள லசித்மலிங்க அடுத்த தெரிவுக்குழுவில் இடம்பெறுபவர்கள் யார் என்றாலும் அவர்கள் வீரர்கள் அணியில் இடம்பெறுவது முக்கியம் வெளியில் அவர்களை வைத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதை உணரவேண்டும் எனவும் லசித்மலிங்க தெரிவித்துள்ளார்.
என்னால் இளம் வீரர்களிற்கு எதனையாவது வழங்கமுடியும் என நான் கருதினால் நான் அணியில் இடம்பெறவேண்டும்,இதன் காரணமாக இப்படித்தான் விளையாடவேண்டும் என்பதை நான் அவர்களிற்கு தெரிவிக்கமுடியும் எனவும் லசித்மலிங்க தெரிவித்துள்ளார்.
அணியில்இடம்பெறாவிட்டால் என்னால்இப்படித்தான் விளையாடவேண்டும் என்பதை அவர்களிற்கு தெரிவிக்க முடியாது எனவும் லசித்மலிங்க தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM