ஜனாதிபதிக்கு பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த இம்ரான் கான்

Published By: Vishnu

20 Nov, 2019 | 10:17 AM
image

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் நாடும், இலங்கை மக்களும் அதிக வெற்றிகளையும் செழிப்பையும் அடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில் அவரை, வாழ்த்துவதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோதே இம்ரான் கான் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமை மற்றும் பார்வையில் இலங்கை மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இந்தத் தேர்தல் பிரதிபலித்துள்ளது.

ஜனாதிபதி கோத்தாபயவின் கீழ் நாடும் அதன் மக்களும் அதிக வெற்றிகளையும் செழிப்பையும் அடைவார்கள் என்றும் இம்ரான் கான் இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு உறவுகள் குறித்தும் இந் உரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் இதன்போது இம்ரான் கான் கேட்டுக் கொண்டுள்ளார்.  

அதற்கிணங்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் அவரின் அழைப்புக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08