29 ஆம் திகதி இந்தியா செல்கிறார் ஜனாதிபதி

Published By: Digital Desk 3

20 Nov, 2019 | 09:50 AM
image

(ரொபட் அன்டனி)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 29 ஆம் திகதி  இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்றே  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இவ்வாறு இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

நேற்று மாலை இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர்   ஜெய்சங்கர்  இந்திய பிரதமர் மோடியின்  அழைப்பு கடிதத்தை  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம்  கையளித்தார்.  

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை  இந்திய இந்திய வெளியுறவு அமைச்சர்   ஜெய்சங்கர்   ஜனாதிபதி கோத்தாபயவை சந்தித்து பேச்சு நடத்தியபோது      புதிய ஜனாதிபதிக்கு வாழ்தது தெரிவித்ததுடன்    பிரதமர் மோடியின் அழைப்புக் கடிதத்தையும்   கையளித்தார்.

அதன்படி இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷ எதிர்வரும் 29  ஆம் திகதி  இந்தியாவுக்கு விஜயம் செய்வதாக  உறுதியளித்தார்.

இந்த விஜயத்தின்போது  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்த் மற்றும்  முக்கிய அமைச்சர்களையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது  இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது  தொடர்பாகவும் விரிவாக பேசப்படவுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22