சஜித்தின் தோல்விக்கான சதித் திட்டம் ; பின்னணியை வெளிப்படுத்தினார் நளின் பண்டார

Published By: Vishnu

19 Nov, 2019 | 04:50 PM
image

(நா.தனுஜா)

எமது தரப்பில் இருந்துகொண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை தோல்வியடையச் செய்வதற்காக செயற்பட்ட சிலரே, தற்போது மஹிந்த ராஜபக்ஷ தரப்பைக் காப்பாற்றிக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் தமது அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்வதாக அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

1994 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்ததும், சற்றும் தாமதிக்காமல் சூட்கேஸுடன் வெளியேறினார். அவ்வாறு செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது என்ன செய்கின்றார்? பிரதமர் என்ற வகையில் தற்போதைய அரசாங்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான உரிமை அவருக்கில்லை.

அரசியல் இராஜதந்திரம் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டுமாயின், உடனடியாக மஹிந்த தரப்பிடம் அரசாங்கத்தைக் கையளித்து சுமார் 120 நாட்கள் அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற இடமளித்து, அதனூடாகக் கிடைக்கக்கூடிய அரசியல் ஆதாயத்தை பெறுவதே ரணில் விக்கிரமசிங்க செய்ய வேண்டியதாகும். 

எதிரணியினர் எதிர்நோக்கத்தக்க நெருக்கடிக்கு இடமளிக்காமல் நேரடியாகப் பொதுத்தேர்தலுக்குச் செல்லும் நோக்கில் செயற்படும் வஜிர அபேவர்தன போன்ற கொந்தராத்துக்காரர்கள் சிலர் எமது தரப்பில் இருக்கின்றார்கள். அவர்களே பிரதமருடன் இணைந்து இந்த நெருக்கடியைக் கடப்பதற்கு மஹிந்த தரப்பிற்கு உதவுகின்றார்கள். எமது தரப்பில் இருந்துகொண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை தோல்வியடையச் செய்வதற்காக செயற்பட்ட சிலரே, தற்போது மஹிந்த ராஜபக்ஷ தரப்பைக் காப்பாற்றிக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் தமது அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிக்கின்றார்கள்.

அரசாங்கத்தைக் கையளிப்பது தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷ தரப்புடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். இதுவிடயத்தில் அவர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியமில்லை. எம்முடனேயே கலந்தாலோசிக்க வேண்டும். ஆனால் எதிரணியுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்திவிட்டார் என்றே தோன்றுகிறது. நேற்று அநுராதபுரத்திற்கும் சென்றிருந்ததைப் பார்த்தோம். 

எனவே நாளை பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறுவது முற்றிலும் பொய்யாகும். அவர் தொடர்ந்தும் கட்சியின் தலைமைத்துவத்தில் இருப்பதற்கே எதிர்பார்க்கின்றார். ஆனால் நான் தற்போது மேற்கொண்டுள்ள தீர்மானத்தை ஒத்த நிலைப்பாட்டிலேயே கட்சியில் பெரும்பான்மையானோர் இருக்கின்றனர்.

கொழும்பிலுள்ள உலக வர்த்தக மையத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58