(ஆர்.விதுஷா)
ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து மலையகத்தின் சில பகுதிகளில் தமிழ் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வன்முறைகளை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுத்து தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதியாக கோதாபய ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து நாடு பூராவும் வெற்றிக்கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதிலும் சிறுபான்மையினர் என்ற ரீதியில் எமது மக்கள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
தேர்தல் வெற்றியை கொண்டாடுவதென்பது அவரவர் உரிமை. ஏனைய இனத்தவருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்படுதல் காட்டுமிராண்டிதனமான செயலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM