தென்கொரிய குடியரசில் ஷின்ஷியோன்ஜி யேசு தேவாலயக் கல்லூரியில் சுமார் ஒரு லட்சம் பேர் பைபிள் கற்றைநெறியில் பட்டம் பெற்றுள்ளனர்.
இன்றைய ஊழல் மற்றும் மதசார் நடவடிக்கைகளில் விரக்தியுற்ற மக்கள் தங்களுடைய ஆன்மிகத்தேவைகளுக்காக இக்கற்கைநெறியைக் கற்பதற்காக ஷின்ஷியோன்ஜி யேசு தேவாலயக் கல்லூரியைப் பலரும் நாடிவருகின்றனர்.
இதன்மூலம் ஷின்ஷியோன்ஜி பெரிதும் வளர்ச்சிகண்டு வருகின்றது.
ஆறுமாத பைபிள் கற்கைநெறியைக்கொண்ட இப்பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்த ஒரு லட்சத்து ஆயிரத்து 286 பேருக்கு இம்மாதம் 10 ஆம் திகதி ஷின்ஷியோன்ஜியில் பட்டமளிப்பு இடம்பெற்றது.
ஷின்ஷியோன்ஜி கல்லூரியில் இணையத்தின் ஊடாகவும் மாணவர்கள் தமது கற்கைநெறியைத் தொடர்ந்திருக்கின்றனர்.
ஷின்ஷியோன்ஜி தனது ஆன்மிகத் தேவைகளைப் பூர்த்தி செய்தமையினால் அதனைத் தெரிவு செய்ததாக இப்பட்டப்படிப்பை மேற்கொண்ட ஜீ ஹூன் பக் தெரிவித்தார்.
அத்துடன் 1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஷின்ஷியோன்ஜி யேசு தேவாலயக் கல்லூரி இன்றைய காலகட்டத்தில் பெரும் வளர்ச்சி கண்டுவருகின்றது. இங்கு மேற்கொள்ளப்படும் சிறந்த தரத்திலான பைபிள் போதனைக்காகவே 95 சதவீதமான மாணவர்கள் இங்கு கற்றைநெறியைத் தெரிவு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM