தாய் வீட்டுக்கு சென்ற மனைவி திரும்பி வராததால் கணவன் ரயில் முன்பாய்ந்து தற்கொலை 

Published By: Digital Desk 4

19 Nov, 2019 | 10:53 AM
image

திருமணமான ஒரே மாதத்தில் தன் தாய் வீட்டுக்கு சென்ற காதல் மனைவி திரும்பி வராததால் பொறியியலாளர் ஒருவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

இந்தியாவின் தமிழகத்தின் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயப்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன் மகன் தனுஷ்கோடி(வயது 20). பொறியியலாளரான இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு முகநூல் மூலம் நாமக்கல்லை சேர்ந்த பென்னி(18) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இதையடுத்து தனுஷ்கோடி கடந்த மாதம் நாமக்கல் சென்று, அங்குள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பென்னியை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு அவர் தனது காதல் மனைவியை சொந்த ஊருக்கு அழைத்து வந்து வசித்து வந்தார்.

இந்த நிலையில் பென்னி தனது கணவருடன் கடந்த வாரம் நாமக்கல்லில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். அப்போது பென்னிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஓரிரு நாட்கள் கழித்து தனுஷ்கோடி தனது மனைவியுடன் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார். இதையறிந்த பென்னியின் பெற்றோர் தங்களது மகளுக்கு உடல்நலம் சீரானதும் கச்சிராயப்பாளையத்துக்கு அனுப்பி வைப்பதாக கூறினர். அதேபோல் பென்னியும் நீங்கள் சொந்த ஊருக்கு செல்லுங்கள் நான் ஓரிரு நாட்களில் அங்கு வருகிறேன் என்று கூறியுள்ளார்.

காதல் மனைவி தன்னுடன் வரவில்லையே என்ற ஏக்கத்தில் தனுஷ்கோடி அங்கிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் மாலை சின்னசேலத்துக்கு வந்தார். பின்னர் அவர் தனது தந்தை காளியப்பனை தொடர்பு கொண்டு பென்னி தன்னுடன் வரவில்லை. அவர்களது பெற்றோர் எங்களை பிரித்து விடுவார்களோ? என்று தனக்கு சந்தேகமாக உள்ளது. ஆகவே பென்னி இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும், நான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த காளியப்பன் தனது உறவினர்களுடன் சின்னசேலம், கச்சிராயப்பாளையம் பகுதியில் தனுஷ்கோடியை தேடிவந்தனர்.

இந்த நிலையில் சின்னசேலம் அம்மையகரம் செல்லும் சாலையில் உள்ள ரயில் கடவை அருகே தண்டவாளத்தில் தனுஷ்கோடி இரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக நேற்று காலை சேலம் ரயில்வே பொலிசாருக்கும், காளியப்பனுக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து , அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர்.

அப்போது, நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் பயணிகள் ரயில் முன்பு பாய்ந்து தனுஷ்கோடி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பொலிசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10