பாகிஸ்தானில் 40 பேருடன் சென்ற படகு விபத்து - இதுவரை  8 சடலங்கள் கண்டுபிடிப்பு ; மீட்பு பணிகள் தீவிரம்

Published By: Digital Desk 4

18 Nov, 2019 | 09:47 PM
image

பாகிஸ்தானின் கிழக்கு பிராந்தியத்தில் 40 பயணிகளுடன் பயணித்த படகு ஒன்று சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  8 பேரின் சடலங்களை மீட்புப்படையினர் கண்டெடுத்துள்ளனர்.

பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட ஒகாரா மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) 40 பயணிகளுடன் சட்லெஜ் என்ற ஆற்றில் பயணித்த படகு திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி, தண்ணீரில் மூழ்கியது.

குறித்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற மீட்பு படையினர் சடலங்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உள்ளூர் மக்களின் உதவியுடன் குறித்த மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ் பாக்கிஸ்தான் இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 12:56:28
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06