சஜித்திற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி - பிரதமர் 

Published By: Vishnu

18 Nov, 2019 | 05:31 PM
image

(நா.தனுஜா)

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியையும் கூறியிருக்கிறார்.

பிரதமர் அலுவலகத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் எவ்வித அரசியல் தலையீடுகளும், அழுத்தங்களுமின்றி சுதந்திரமாகவும் நியாயமாகவும் செயற்படக்கூடிய சூழலொன்றை நாம் உருவாக்கினோம். 

அதனூடாக இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மிகவும் அமைதியானதும், நேர்மையானதுமான முறையில் நடைபெறுவதற்கும், வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்குச்சாவடிகளுக்குச் சென்று தமது விருப்பத்திற்குரிய வேட்பாளருக்கு வாக்களிப்பதற்குமான சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது.

சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்து எம்மால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நிலை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாக இருக்கும் அதேவேளை, அத்தகைய சூழலில் கடந்த 16 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்த அனைவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, அது முடிவடையும் வரை அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், பொலிஸார், முப்படையினர் மற்றும் ஏனைய அனைத்துத் தரப்பினருக்கும் அமைதியைப் பேணுவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும் நன்றி கூறுகின்றேன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08