மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில் பாழடைந்த வெற்றுக்காணி ஒன்றிலிருந்து கைவிடப்பட நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலலிஸார் தெரிவித்தனர்
இருதயபுரம் 10 ம் குறுக்கு வீதியிலுள்ள குறித்த பாழடைந்த வெற்றுக்காணியில் அருகில் சிறுவர்கள் நேற்று பகல் விளையாடிக்கொண்டிருந்த போது குறித்த வெற்றுக்காணிக்குள் பந்து வீழ்ந்ததையடுத்து அங்கு சென்ற சிறுவர்; பந்தை தேடும் போது பந்து வடிவிலான குண்டு ஒன்றை கண்டு அதனை எடுத்து வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் பந்து என காட்டிய போது அதனை கண்ட பெற்றோர் சிறுவனிடம் இருந்து அதனை பறித்து குறித்த வெற்றுக் காணியில் வீசியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது ;.
இதனையடுத்து குறித்த குண்டு தொடர்பாக இரவு 7 மணியளவில் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு சென்ற பொலிசார் கைவிடப்பட்டிருந்த கைக் குண்டை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.;
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணையினை மட்டு தலைமையக பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM