(நா.தனுஜா)
அடுத்த பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் சபாநாயகர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க எதிர்பார்க்கின்றோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்துள்ள கோத்தபாய ராஜபக் ஷவிற்கு வாழ்த்துக் தெரிவிப்பதாக குறிபபிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உரிய தரப்புக்கள் அனைத்துடனும் கலந்துரையாடி பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக் ஷ வெற்றியடைந்துள்ளதையடுத்து நேற்றைய தினம் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்தே பிரதமர் இந்த அறிக்கையை வெ ளியிட்டுள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தராஜபக் ஷவுடனும் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
புதிதாகத் தெரிவாகியிருக்கும் ஏழாவது நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவிற்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாம் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து செயற்படுபவர்கள் என்ற வகையில் சபாநாயகர், அரசியல் கட்சிகளின் தலைவர் கள் மற்றும் அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அடுத்ததாக நடைபெறவுள்ள பாராளு மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM