(எம்.மனோசித்ரா)
அமைதியானதும் சுமுகமானதுமான தேர்தலை நடத்தி முடிப்பதற்கு உதவிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட சகல அரச தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் காலத்தில் பக்க சார்பாக செயற்பட்ட அரச மற்றும் தனியார் ஊடகங்கள் மீது கடும் விசனத்தையும் வெளியிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி முடிவினை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இராஜகிரியவில் உள்ள சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறிய ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்ததாவது :
அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு உதவிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ, சபாநாயகர் கருஜய சூரிய மற்றும் ஏனைய அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
இலங்கையில் முதன் முறையாக பதவியிலிருக்கும் ஜனாதிபதி நடுநிலைமை வகித்து பக்க சார்பற்று செயற்பட்டமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விஷேடமாக நன்றி தெரிவிக்கின்றேன்.
தேர்தலில் போட்டியிட்ட சகல வேட்பாளர்களும், வேட்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியின் செயலாளர்களும் , ஆதரவாளர்களும் அமைதியான தேர்தல் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கினர். மேலும் சிவில் அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் என்பவற்றோடு தேர்தலில் முக்கிய பாகம் வகித்த வாக்காளர்களும் அமைதியான தேர்தல் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன். இந்த அமைதியான நிலைவரத்தை இறுதி வரையில் தக்க வைத்துக் கொள்வதற்கு பொலிஸ் மற்றும் முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு துறையினர் முழுமையாக தமது ஒத்துழைப்பை வழங்கியிருக்கின்றனர்.
ஊடகங்கள் மீது விசனம்
இம்முறை நடைபெற்றதைப் போன்றே எதிர்வரும் காலங்களிலும் பொலித்தீன் பாவனையற்ற தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றேன். எனினும் பக்க சார்பாக செயற்பட்ட தனியார் மற்றும் அரச ஊடகங்களை அவ்வாறு செயற்படவிடாமல் தடுப்பதற்கு ஆணைக்குழுவால் முடியாமல் போனதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். சட்ட ரீதியான அரச ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருக்கின்ற போதிலும் தனியார் ஊடகங்களை முறையாக வழிநடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லாமையே இதற்கான காரணமாகும்.
எனினும் சட்டத்தை மீறி செயற்பட்ட அரச ஊடக அதிகாரிகள் மீது அரசியலமைப்பிற்கேற்ப தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும். இதே வேளை தனியார் ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அல்லது குறிப்பிட்ட தனியார் ஊடகமொன்று தாம் குறித்த கட்சிக்கு ஆதரவாக செயற்படுகின்றோம் என்பதை பகிரங்கமாக அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் எதிர்காலத்தில் தேர்தல்கள் இன்றி தனியார் ஊடகங்களின் பிரதானிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான அதிகாரத்தை வழங்குவது பொறுத்தமானதாக இருக்கும் என்று கருதுகிறேன். இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் நிச்சயம் கலந்துரையாடப்படும்.
பாதுகாப்பு துறை
தேர்தலில் விமானப்படை, கடற்படை , இராணுவம் மற்றும் பொலிஸார் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக முறைப்பாடுகள் எவையும் கிடைக்காமை மகிழ்ச்சியளிக்கிறது. இதே போன்று எதிர்காலத்திலும் பாதுகாப்புதுறையினர் சீருடை அணிந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருக்கும் நிலைமையே காணப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இது அரசியல்வாதிகளின் நடைமுறைக் கோவைகளில் உட்படுத்தப்பட வேண்டிய ஒரு விடயமாக நான் கருதுகின்றேன். மேலும் அரசியல் அதிகாரம் அற்ற அரச உத்தியோகத்தர்கள் சிறியளவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. எனினும் இதுவும் கவலைக்குரிய விடயமாகும். இவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
மதத் தலைவர்களின் தலையீடு
மேலும் கடந்த தேர்தல்களை விடவும் இம்முறை மதத் தலைவர்களின் அரசியல் தலையீடு குறைவாகவே காணப்பட்டது. மதத் தலைவர்களுக்கு ஏனைய சாதாரண பிரஜைகளைப் போன்று அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்விதத் தடையும் கிடையாது. ஆனால் தேர்தல் காலங்களில் அவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு சட்டம் கிடையாது. எனவே இவ்வாறான செயற்பாடுகள் எதிர் காலத்தில் நடைபெறாமல் இருப்பதில் அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM