(செய்திப்பிரிவு)
ஜனாதிபதி தேர்தலில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் நாங்கள் சிறந்த வெற்றியினை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து டலஸ் அழகப்பெரும வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அரசியல் வரலாற்றில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ அறிமுகப்படுத்திய அரசியல் கலாச்சாரத்தினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது எமது பொறுப்பாகும். ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள் உத்தியோகப்பூர்வமான முறையில் வெளியிடாத நிலையிலும் வெற்றிக்கான சாத்தியம் காணப்படுகின்றது.
சிறந்த எதிர்காலத்தினையும், நல் அரச நிர்வாகத்தினையும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ அரசியல் ரீதியில் அறிமுகப்படுத்திய அரசியல் கலாச்சாரத்தினை முழுமையாக முன்னெடுத்து செல்வது எமது பொறுப்பாகும்.
கௌரவமானதும், வெற்றியானதும் சட்டத்திற்கு ஏற்ப அரச நிர்வாகத்தை நாளை முதல் முன்னிலைப்படுத்துவது எமது பிரதான செயற்பாடாகும்.பல்வேறு நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள் அனைத்தினையும் கடந்து சிறந்த தேசியத்தை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்கிய அனைவரும் கௌரவிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM