(நா.தனுஜா)
தெரணியகலை பகுதியில் இரு கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் ஜனாதிபதி தேர்தல் தினமான இன்றையதினம் சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு இடம்பெறுகையில் பிரதான இரு கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் ஆரம்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இரு தரப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு ஒருவர் கடுமையாக தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இருவரை கைது செய்தனர்.
மேலும் காயமடைந்தவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார். தெரணியகலை பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM