ஜனாதிபதி தேர்தல் : 2 மணி வரையிலான வாக்குப்பதிவுகளின் விபரம் இதோ!

16 Nov, 2019 | 04:16 PM
image

2019 ஜனாதிபதித் தேர்தல் இன்று இடம்பெற்று வருகின்ற நிலையில், நாடளாவிய ரீதியில் வாக்குப் பதிவுகள் மிகவும் சுமுகமான முறையில் இடம்பெற்றுவருகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்று வருவததாகவும், வாக்களிப்பு உகந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் பதியப்படவில்லையென கஃபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியில் வாக்குப் பதிவு ஓரளவுக்கு இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக நுவரெலியா பகுதியில் மக்கள் மழைக்கும் மத்தியில்சென்று வாக்களிப்பில் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அந்தவகையில், யாழ்ப்பாணத்தில்  55 வீதமான வாக்குகளும் மன்னாரில் 56.7 வீதமான வாக்குகளும், முல்லைத்தீவில், 55.3 வீதமான வாக்குகளும்,  திருகோணமலையில் 65 வீதமான வாக்குகளும் மட்டக்களப்பில், 54.7 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், அம்பாறையில் 55 வீதமான வாக்குகளும் அனுராதபுரத்தில் 65 வீதமான வாக்குகளும் மாத்தறையில் 65 வீதமான வாக்குகளும் பதுளையில் 70 வீதமான வாக்குகளும் காலியில் 67 வீதமான வாக்குகளும் இரத்தினபுரியில் 65 வீதமான வாக்குகளும் ஹம்பாந்தோட்டையில் 70 வீதமான வாக்குகளும் பதியப்பட்டுள்ளன.

அத்துடன் வவுனியாவில் 60 வீதமான வாக்குகளும் நுவரெலியாவில் 60 வீதமான வாக்குகளும் கண்டியில் 70 வீதமான வாக்குகளும் பொலன்னறுவையில் 72 வாக்குகளும் குருநாகலில் 60 வீதமான வாக்குகளும் மாத்தளையில் 70 வீதமான வாக்குகளும் திகாமடுல்லயில் 60 வீதமான வாக்குகளும் கிளிநொச்சியில் 61 வீதமான வாக்குகளும் மொனராகலையில் 60 வீதமான வாக்குகளும் கேகாலையில் 55 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51